சீரற்ற வானிலையால் தொடரும் மண்சரிவு!

Date:

மலையகத்துக்கான ரயில் பாதையில் ஹாலிஎல – உடுவர பிரதேசத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று (22) நள்ளிரவு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக ரயில் பாதையில் பதுளை வரை இயங்கும் ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாறைகள் சரிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதி பலாங்கொடை சமனலவெவ ஹல்பே பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மண்சரிவு காரணமாக கொழும்பு பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை, இம்புல்பே, சீலகம ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...