ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஸ்தாபகத் தலைவர் உமர் அலி காலமானார்

Date:

புத்தளம் ஏத்தாளையைச் சேர்ந்த ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷேஹ் உமர் அலி (றியாதி) அவர்கள் காலமானார்கள்.

புத்தளம் ஏத்தாளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை அதே கிராமத்தில் கல்வி கற்றதுடன் அவரது சகோதரர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் தனது 24 ஆவது வயதில் மார்க்கக் கல்வி கற்பதற்காக மூதூர் நத்வதுல் உலமாவில் கல்விபயின்றதுடன் அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் கல்வி கற்றார்.

மேலும் பாகிஸ்தானிலும், சவூதி ரியாதிலும் தனது உயல்கல்வியை கற்று முடித்த பின்னர் இலங்கையில் பறகஹதெனிய பகுதியில் இலங்கை தௌஹீத் ஜமாஅத்துடன் இணைந்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கல்லூரியில் விரிவுரையாளராக கடமைபுரிந்தார்.

அதேநேரத்தில் நதீர் மௌலவியுடன் இணைந்து ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் இயக்கத்தை 1989 ஆண்டு ஏத்தாளையில் உருவாக்கினார்.

அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல் ) அவர்களையும் நம்பும் ஒவ்வொரு மனிதனும் தற்காலத்தில் காணப்படும் இயக்கங்கள் , தரீகாக்கள், மத்ஹபுகள் போன்றவற்றை கைவிடுவதோடு தாம் இருக்கும் தவறான கொள்கை கோட்பாடுகளை சரியானதும் , தெளிவானதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் மார்க்கத்துக்கு முரணானவர்கள் என்பதும் இவர்களின் கொள்கைகளும், கோட்பாடுகளுமாக இருந்தது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் அஸர் தொழுகையின் பின்னர் ஏத்தாளையில் நடைபெற்றது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...