தேசபந்து தென்னகோன் நியமனம்:ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல்:பேராயர் விசனம்

Date:

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து நியமிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் எவற்றையும் கருத்திற்கொள்ளாமல் அவருக்கு நியமனம் வழங்கியமையின் ஊடாக மக்களின் பாதுகாப்பின் மீது ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை என்பதே புலப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் அதனை உதாசீனம் செய்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றச்சட்டை போட்டவரே தேசபந்து தென்னகோன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை மிலேச்சத்தனமான செயற்பாடு என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...