பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்

Date:

 பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றிய வந்த நிலையிலேயே அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்த பின்புலத்திலேயே இன்று இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...