பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்

Date:

 பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றிய வந்த நிலையிலேயே அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்த பின்புலத்திலேயே இன்று இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...