வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

Date:

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விஷேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

கப்பம் கோரி வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலரை அச்சுறுத்திய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தநிலையிலேயே, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி நாட்டிலுள்ள சிலர் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...