வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற பாராளுமன்ற எம்.பிக்களுக்கு நிதி?

Date:

வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் ரூ. ஒரு கோடி  91 இலட்சத்துக்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முன்னாள் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட ஜயந்த வீரசிங்க ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமான நிலையில் அவருக்காக செலுத்தப்பட்ட தொகை ஒரு கோடியே 21 இலட்சத்து 60,000 ரூபாய் ஆகும்.

கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் இரண்டு தவணையாக இந்தத் தொகை செலுத்தப்பட்டது.

ஜயந்த வீரசிங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொகை 69 இலட்சத்து 55,000ரூபாய் ஆகும்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மூளை தொடர்பான நோய்கள், முழங்கால் மற்றும் இடுப்பு தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் இதர சிகிச்சைகளுக்கு 5,101 நோயாளிகள் வைத்திய உதவி கோரிய நிலையில் 2750 நோயாளிகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டதாக தேசிய தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 54 வீதம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய விசாரணைக்கு நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...