‘2023’ வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன!

Date:

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில முன்மொழிவுகள் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் எண்ணிக்கை 120 ஆகும். அதில் 29 வருவாய் முன்மொழிவுகள், 30 செலவின முன்மொழிவுகள் மற்றும் 61 கொள்கை முன்மொழிவுகளாகும். இவற்றில் 24 வருவாய் முன்மொழிவுகளும், 17 கொள்கை முன்மொழிவுகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, ​​தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் முன்மொழிவுகளின் எண்ணிக்கை 62 ஆகும். இதில் 5 வருவாய் முன்மொழிவுகள், 27 செலவின முன்மொழிவுகள் மற்றும் 30 கொள்கை முன்மொழிவுகள் உள்ளடங்குகின்றன.

இதன்படி, மொத்த வரவு – செலவு திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அமைச்சுகளில் ஆராயப்படும்.

தொழில்நுட்ப குறைபாடுகள், மனித வள குறைபாடுகளாலும் அல்லது சட்ட சிக்கல்கள் காரணமாகவும் சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.“ என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...