‘2023’ வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன!

Date:

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில முன்மொழிவுகள் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் எண்ணிக்கை 120 ஆகும். அதில் 29 வருவாய் முன்மொழிவுகள், 30 செலவின முன்மொழிவுகள் மற்றும் 61 கொள்கை முன்மொழிவுகளாகும். இவற்றில் 24 வருவாய் முன்மொழிவுகளும், 17 கொள்கை முன்மொழிவுகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, ​​தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் முன்மொழிவுகளின் எண்ணிக்கை 62 ஆகும். இதில் 5 வருவாய் முன்மொழிவுகள், 27 செலவின முன்மொழிவுகள் மற்றும் 30 கொள்கை முன்மொழிவுகள் உள்ளடங்குகின்றன.

இதன்படி, மொத்த வரவு – செலவு திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அமைச்சுகளில் ஆராயப்படும்.

தொழில்நுட்ப குறைபாடுகள், மனித வள குறைபாடுகளாலும் அல்லது சட்ட சிக்கல்கள் காரணமாகவும் சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.“ என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...