2024 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜெட்’ எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில்!

Date:

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூடிய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...