80 பேருடன் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி!

Date:

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் அடங்கிய சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் டுபாய் செல்லவுள்ளார்.

டுபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று நடத்துகின்ற சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்காகவே இந்த குழு அங்கு செல்கிறது.

இது தொடர்பில், ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், , 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றும், 15 தொழில்நுட்ப ஆலோசகர்களும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் டுபாய் பயணத்துக்கான கட்டணங்கள் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது பிற நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருக்கலாம் என்றும் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...