80 பேருடன் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி!

Date:

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் அடங்கிய சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் டுபாய் செல்லவுள்ளார்.

டுபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று நடத்துகின்ற சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்காகவே இந்த குழு அங்கு செல்கிறது.

இது தொடர்பில், ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், , 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றும், 15 தொழில்நுட்ப ஆலோசகர்களும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் டுபாய் பயணத்துக்கான கட்டணங்கள் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது பிற நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருக்கலாம் என்றும் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...