‘COP 28’ மாநாட்டில் கலந்துகொள்ள டுபாய் செல்கிறார் ஜனாதிபதி!

Date:

Cop28 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட உள்ளார்.

நாளை வியாழக்கிழமை (30) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று யோசனைகளை முன்வைக்க உள்ளார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதே இலங்கையின் பிரதான முன்மொழிவாகும்.

வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் சிரமப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மன்றத்தை நிறுவுதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி முன்வைக்க உள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் இலங்கையிலிருந்து 20 இளைஞர் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி தலைமையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மற்றும் ஜனாதிபதியின் வெளிவிவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே உட்பட மேலும் சில முக்கிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...