சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்…!

Date:

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர் தரபரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கை தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதால், ஜனவரி மாத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக வவுச்சர் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...