இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையில் நேற்று மாலை கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பல் பீட மாணவர்கள் மூவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.