அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு!

Date:

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவையொட்டி அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குவைத் தூதரகத்தில் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அதேநேரம் குவைத்தூதரகம் (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) மூன்று நாட்களுக்கு அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை வரை திறந்திருக்கும்.

குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86 ஆவது வயதில் காலமானார்.

குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...