இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் மீது தாக்குதல்

Date:

மாரவில பிரதேசத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியதுடன், காருடன் மோதியதில் சேதம் விளைவித்துள்ளனர்.

மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று காலை இராஜாங்க அமைச்சர் தங்கொட்டுவைக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனம் சேதமடைவதைக் கண்டு ஆத்திரமடைந்த வர்த்தகர் ,ஜீப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜீப் மீது இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...