இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கிய நாடுகளில் சவூதி அரேபியா முதல் இடம்

Date:

2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில், 63,000 க்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும், 200,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய இலங்கையை விட்டு வெளியேறுகிறார்கள்.

கடந்த ஆண்டு முதல் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமாக அவை உள்ளன.

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அம்சா, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டில் 7 பில்லியன் டொலர்களுக்கு மேல் பணம் அந்நிய செலாவணியாக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் கணிசமான பகுதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள வெளிநாட்டவர்களால் பங்களிக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சவூதி அரேபியா , இலங்கையர்களுக்கு 63,000 வேலை வாய்ப்புகளை (வாய்ப்புகளை) உருவாக்கி இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 7-8 பில்லியன் டொலர்கள் வரையிலான வருடாந்திர பணம் அனுப்பும் தொகையில், கணிசமான பகுதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மொத்த பணம் அனுப்புவதில் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...