கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: மைத்திரி அறிவிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர்களைத் தவிர பிரபல வர்த்தகர்களான திலித் ஜயவீர, தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு நான்கு நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...