காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் வரை உயிரிழப்பு

Date:

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜபாலியா நகரில் அல்-பார்ஷ் மற்றும் அல்வான் குடியிருப்புத் தொகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் மேலும் பலரை காணவில்லை என்று வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைக்கு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பலர், அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...