கிழக்கின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்

Date:

முன்னாள் கிழக்கு மாகாண  முதல்வர் நஜீப் அப்துல் மஜீத் இன்று காலமானார்.

சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தனது 67 ஆவது வயதில் காலமானார்.

நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அவரது சொந்த ஊரான திருகோணமலை கிண்ணியாவில் இடம்பெறும்.

நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட நஜீப் அப்துல் மஜீத் 1994 இல் தனது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்து தபால் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராக திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக கூட்டுறவு அமைச்சராக இருந்து பின்னர் 2021 செப்டம்பர் தொடக்கம் 2015 வரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடையாளத்தை தன்னகத்தே கொண்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...