சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மரணம் கொலை என உறுதி!

Date:

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்ட மத்ரசா மாணவனின் மரணமானது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (5) மாலை நேரம் சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் உயிரிழந்த காத்தான்குடி மாணவனின் மரண விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த மரணமானது ஒரு “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மத்ரஸா அதிபர் (மெளலவி) சஹ்னாஸ் என்பவரால் தாக்குதலுக்கு உள்ளாகியே குறித்த 13 வயது மாணவன் உயிரிழந்திருக்கக்கூடுமென மக்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகம் இப்போது “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தையடுத்து இன்று (07) நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் இம் மாணவனின் மரணம் “கொலை” என சட்ட வைத்திய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( மூலம் -Rifthi ali)

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...