தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு:

Date:

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை 4.00 மணிமுதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானித்திருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்திருந்தது.

குறித்த பணிப்புறக்கணிப்பில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களின் செயற்பாடுகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதன்காரணமாக பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...