தாய்லாந்து வெள்ளத்தில் அறுவர் உயிரிழப்பு: பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

Date:

தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் பெய்து கனமழை காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய தென் மாநிலங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

நராத்திவாட் மாநிலத்தில் 89 வயதான பெண்மணி, ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்கள் நீடித்த கனமழை வெள்ளத்தில் சிக்கி மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வீதிகள் சேற்றில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் வீடுகளின் கூரைகளில் இருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

இன்று (27) வெள்ள நீரின் அளவு குறைந்துள்ளதாக தாய்லாந்து அனர்த்த தடுப்பு மற்றும் மீட்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...