பங்களாதேஷ் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது

Date:

பங்களாதேஷ் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை உத்தியோகபூர்வ கையளித்தார்.

இருபத்து நான்கு அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த நன்கொடையானது, இலங்கை அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு இணங்க, பங்களாதேஷின் அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான Essential Drugs Company Limited (EDCL) இனால் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி தெரிவித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் நட்புறவான செயலுக்கு நன்றி தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், குறிப்பாக முக்கியமான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பங்கிற்காகவும் அவர் பாராட்டினார்.

உயர் ஸ்தானிகர் அரிஃபுல் இஸ்லாம், இந்த நன்கொடை இலங்கை மீதான பங்களாதேஷின் அர்ப்பணிப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு ஒரு சான்றாகும் என விவரித்தார்.

மருந்து மற்றும் சுகாதாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்தார்.

 

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...