மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் விளக்கம்

Date:

5 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது.

கொவிட் காலத்துக்குக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது துண்டிப்பு விகிதம் அசாதாரணமானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை, இவ்வருடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை என உறுதியளித்துள்ளது.

மின்சாரப் பாவனையின் ஒரு மாதத்திற்குப் பின்னரே மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

வழமையாக ஒரு மாதத்திற்குப் பின்னரே சிவப்பு அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவித்த இலங்கை மின்சார சபை  சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 544,488 மின் இணைப்புகள் துண்டிப்புகள் மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...