அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு!

Date:

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவையொட்டி அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குவைத் தூதரகத்தில் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அதேநேரம் குவைத்தூதரகம் (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) மூன்று நாட்களுக்கு அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை வரை திறந்திருக்கும்.

குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86 ஆவது வயதில் காலமானார்.

குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...