அரச நிறுவனங்களின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு

Date:

இலங்கையிலுள்ள வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போனஸ் வழங்கும் செயல்முறை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 இல் நிறுவனத்தின் நிதிச் செயற்பாட்டின் அடிப்படையில் போனஸ் கொடுப்பனவுகளுக்கு அரச ஊழியர்கள் தகுதி பெறுவார்கள்.

தகுதி பெற, ஒரு நிறுவனம் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும், 2022 நிதியாண்டில் இலாபம் ஈட்டிருக்க வேண்டும்

வரிக்குப் பிந்தைய இலாபத்தில் குறைந்தபட்சம் 30% ஒருங்கிணைந்த நிதியாக அரசாங்கத்தின் மத்திய திறைசேரிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்தத் தேவைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்யத் தவறிய அரச நிறுவனங்கள் இலாபப் பகிர்வு போனஸுக்குத் தகுதி பெறாது, என்றார்.

இவற்றுக்கு மேலதிகமாக 2022 நிதியாண்டில் நஷ்டம் ஏற்பட்ட எந்தவொரு அரச நிறுவனமும் செயல்முறையிலிருந்து விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...