ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை மற்றும் இமயமலை பிரகடனம் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பகிரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.