இன்று நள்ளிரவு காலிமுகத்திடலில் பல நிகழ்ச்சிகள்: விசேட பாதுகாப்பு திட்டங்கள் அமுல்

Date:

சுற்றுலா அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இணைந்து இன்று இரவு புதுவருட பிறப்பை முன்னிட்டு காலி முகத்திடலில் பல தனித்துவமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி அங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த இசை நிகழ்ச்சியில் இலங்கையின் பல நட்சத்திரங்கள் பாடுவார்கள் எனவும் ஃப்ளாஷ் பேக் இசைக்குழுவால் கச்சேரி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் இலட்சக்கணக்கான மக்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த இடங்களிலிருந்து மக்களை காலிமுகத்திடல் கச்சேரி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் பல பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...