இன்று நள்ளிரவு காலிமுகத்திடலில் பல நிகழ்ச்சிகள்: விசேட பாதுகாப்பு திட்டங்கள் அமுல்

Date:

சுற்றுலா அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இணைந்து இன்று இரவு புதுவருட பிறப்பை முன்னிட்டு காலி முகத்திடலில் பல தனித்துவமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி அங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த இசை நிகழ்ச்சியில் இலங்கையின் பல நட்சத்திரங்கள் பாடுவார்கள் எனவும் ஃப்ளாஷ் பேக் இசைக்குழுவால் கச்சேரி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் இலட்சக்கணக்கான மக்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த இடங்களிலிருந்து மக்களை காலிமுகத்திடல் கச்சேரி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் பல பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...