இன்று சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் மாத்தறை, பொலன்னறுவை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, நுவரெலியா, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.