இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் மீது தாக்குதல்

Date:

மாரவில பிரதேசத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியதுடன், காருடன் மோதியதில் சேதம் விளைவித்துள்ளனர்.

மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று காலை இராஜாங்க அமைச்சர் தங்கொட்டுவைக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனம் சேதமடைவதைக் கண்டு ஆத்திரமடைந்த வர்த்தகர் ,ஜீப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜீப் மீது இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...