இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் மீது தாக்குதல்

Date:

மாரவில பிரதேசத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியதுடன், காருடன் மோதியதில் சேதம் விளைவித்துள்ளனர்.

மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று காலை இராஜாங்க அமைச்சர் தங்கொட்டுவைக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனம் சேதமடைவதைக் கண்டு ஆத்திரமடைந்த வர்த்தகர் ,ஜீப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜீப் மீது இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...