இஸ்ரேல் அகதி முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது: 106 பலஸ்தீனியர்கள் பலி

Date:

பலஸ்தீனியர்கள் தாக்கியுள்ள முகாம்களின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

திங்கள் மற்றும் ஞாயிறு இரவு மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகருக்கு அருகில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 106 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மூன்று மாடி கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்ட காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் நடந்த இந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...