காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் வரை உயிரிழப்பு

Date:

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜபாலியா நகரில் அல்-பார்ஷ் மற்றும் அல்வான் குடியிருப்புத் தொகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் மேலும் பலரை காணவில்லை என்று வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைக்கு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பலர், அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...