குவைத் மன்னர் இறப்புக்கு ரிஷாத் அனுதாபம்!

Date:

குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் உள்ள குவைத் தூதரகத்துக்கு சென்ற ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல்-உமர் சந்தித்து தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில், “மிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன். அவரது ஆட்சிக் காலத்தில் குவைத் மக்களுக்கு மகத்தான சேவையை ஆற்றியவர்.

அவரின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தில் குவைத்தின் நீண்டகால நண்பர்களான இலங்கையர்களாகிய நாங்களும் பங்கேற்கின்றோம்.

அத்துடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அமீர் அவர்களின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்“ என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...