சவூதி அரேபியா விரைவில் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும்!

Date:

சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர், விமானங்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

பல்வேறு நாடுகளுடனான வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே தமது விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்ததாக தெரிவித்தார்.

“எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீஷெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களை இலங்கைக்கு இயக்க முடிந்தது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...