சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மரணம் கொலை என உறுதி!

Date:

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்ட மத்ரசா மாணவனின் மரணமானது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (5) மாலை நேரம் சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் உயிரிழந்த காத்தான்குடி மாணவனின் மரண விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த மரணமானது ஒரு “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மத்ரஸா அதிபர் (மெளலவி) சஹ்னாஸ் என்பவரால் தாக்குதலுக்கு உள்ளாகியே குறித்த 13 வயது மாணவன் உயிரிழந்திருக்கக்கூடுமென மக்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகம் இப்போது “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தையடுத்து இன்று (07) நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் இம் மாணவனின் மரணம் “கொலை” என சட்ட வைத்திய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( மூலம் -Rifthi ali)

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...