சாய்ந்தமருது மதரஸா மாணவன் மரணம்: சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

Date:

 சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த ஐந்தாம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

இதேவேளை மரணம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டு பொலிஸில் முறைப்பாடளித்ததை தொடர்ந்து மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து குறித்த மரணமானது கொலை என சிறுவனின் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...