‘செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் கஹடோவிட்டவில் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு

Date:

செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும் (Artificial Inteligence and Future) எனும் தலைப்பில் மாணவர்களை அறிவுறுத்தும் செயலமர்வொன்று கஹடோவிட்டயில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வினை பஹன மீடியா எகடமி ஏற்பாடு செய்திருந்தது.

கஹடோவிட்ட இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதேசத்தின் 03 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
‘நியூஸ் நவ்’ இணையத்தள பிரதம ஆசிரியர் பியாஸ் மொஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பிரதான விரிவுரையினை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தென் கொரியாவில் இரு வார பயிற்சி பெற்ற, அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக அதிகாரியாக கடமை புரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
இவர் ஊடகத் துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...