‘செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் கஹடோவிட்டவில் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு

Date:

செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும் (Artificial Inteligence and Future) எனும் தலைப்பில் மாணவர்களை அறிவுறுத்தும் செயலமர்வொன்று கஹடோவிட்டயில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வினை பஹன மீடியா எகடமி ஏற்பாடு செய்திருந்தது.

கஹடோவிட்ட இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதேசத்தின் 03 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
‘நியூஸ் நவ்’ இணையத்தள பிரதம ஆசிரியர் பியாஸ் மொஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பிரதான விரிவுரையினை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தென் கொரியாவில் இரு வார பயிற்சி பெற்ற, அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக அதிகாரியாக கடமை புரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
இவர் ஊடகத் துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...