ஜனவரியில் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்படும்

Date:

 ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் (நிகழ்நிலை) பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிவில் சமூக இயக்கங்கள் சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டிய தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நாடியது.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க சிங்கப்பூர் சென்றது. இந்த சட்டமூலம் சிங்கப்பூரின் ஒன்லைன் பொய்மைகள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து (POFMA) பரவலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்துறை பங்குதாரர்களின் உள்ளீடுகளை இந்த சட்டமூலத்தின் இறுதிச் சட்டத்தில் இணைப்பதற்கு அமைச்சு காத்திருக்கிறது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...