தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள்!

Date:

அகில இலங்கை ஷொடோகன் கராத்தே சம்மேளனத்தின் 22 வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்கள் தங்கப்பதக்கங்களை பெற்று சாதித்துள்ளனர்.

இந்த தேசிய மட்ட போட்டிகள் கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் (26) நடைபெற்றது.

தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் WASHI SHOTOKAN KARATE DO சங்கத்தின் புத்தளம் கிளையின் மாணவர்களாகிய ஏ.எம்.அஸாம் 21 வயதுக்குட்பட்ட பிரிவிலும், யூ. தாமிர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவிலும் குமித்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இவர்களை WSKA சங்கத்தின் பிரதான போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம். பெரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

 

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...