நாவற்காடு கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவம்

Date:

புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும், வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் (04) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் பீ.ஜெனட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேத்தாப்பலை பங்கின் உதவி பங்கு தந்தை அருட்திரு ஸ்டணி அடிகளார், புத்தளம் வலயக் கல்விப்பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம்.அனீஸ், ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர் உள்ளிட்ட கல்பிட்டி கோட்டத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் தமிழ் மொழிக்கான ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை அழகுபடுத்தும் வகையில் அன்றைய தினம் பாடசாலையின் ஆரம்ப பிரிவினரால் “மின்னும் தாரகைகள்” எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதிபரின் வாழ்த்துச் செய்தியுடன் ஆரம்பிக்கும் இந்த “மின்னும் தாரகைகள்” சஞ்சிகையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் சாதனை பற்றிய மீள் பார்வை, புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்ற அடைவுகள், ஆசிரியர்களின் அனுபவ பகிர்வு, மாணவர்களின் நிகழ்வுகள் தொடர்பான நிழற்படங்கள் என கச்சிதமாய் இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

(தகவல்:எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...