நீதிபதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ரிஷாத்- விஜேதாச வாக்குவாதம்!

Date:

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் நேற்று முன்தினம் நீதிபதியொருவர் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட நீதிபதி ஒருவரை இழிவுபடுத்தியதாக அமைச்சர் விஜயதாச தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ரிஷாத் பதியுதீன்,

“ஒரு நாள் குறிப்பிட்ட நீதிபதியை நான் சபித்தேன் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார். நான் யாரையும் சபிக்கவில்லை என சொல்ல வேண்டும்,  அதுமட்டுமில்லாமல் நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதிபதி ஒருவருக்கு எதிராக கருத்து வெளியிடும் போது, ​​அமைச்சர் அதனை ஒருபோதும் எதிர்க்கவில்லை” என ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயதாச  ராஜபக்ஷ, எம்.பி பதியுதீன் ‘ஒரு முஸ்லிம் நீதிபதி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக குறிப்பிட்ட நீதிபதியையே குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தின் போது முழு பாராளுமன்றமும் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை விமர்சித்ததை நான் எம்.பி.க்கு நினைவுபடுத்த வேண்டும்” என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...