நீதிபதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ரிஷாத்- விஜேதாச வாக்குவாதம்!

Date:

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் நேற்று முன்தினம் நீதிபதியொருவர் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட நீதிபதி ஒருவரை இழிவுபடுத்தியதாக அமைச்சர் விஜயதாச தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ரிஷாத் பதியுதீன்,

“ஒரு நாள் குறிப்பிட்ட நீதிபதியை நான் சபித்தேன் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார். நான் யாரையும் சபிக்கவில்லை என சொல்ல வேண்டும்,  அதுமட்டுமில்லாமல் நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதிபதி ஒருவருக்கு எதிராக கருத்து வெளியிடும் போது, ​​அமைச்சர் அதனை ஒருபோதும் எதிர்க்கவில்லை” என ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயதாச  ராஜபக்ஷ, எம்.பி பதியுதீன் ‘ஒரு முஸ்லிம் நீதிபதி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக குறிப்பிட்ட நீதிபதியையே குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தின் போது முழு பாராளுமன்றமும் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை விமர்சித்ததை நான் எம்.பி.க்கு நினைவுபடுத்த வேண்டும்” என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...