பதில் பொலிஸ்மா அதிபர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது: சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான சில வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எந்த அடிப்படையில், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அவர் பதில் பொலிஸ்மா அதிபராக அங்கீகரிக்கப்பட்டார் என பேராசிரியர் சாவித்திரி குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...