பதில் பொலிஸ்மா அதிபர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது: சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான சில வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எந்த அடிப்படையில், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அவர் பதில் பொலிஸ்மா அதிபராக அங்கீகரிக்கப்பட்டார் என பேராசிரியர் சாவித்திரி குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...