பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.
பிலிப்பைன்ஸின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின.
இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்கு உயிர்சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர். இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
முன்னதாக இந்தோனேசியாவின் கெபுலாவான் பாபர் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்து வெளியிட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியதால் முதலில் இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் ஒரு சில இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்னவென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் தான்.