புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 5.4 பில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, தொழிலாளர்கள் கடந்த நவம்பரில் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட 384.4 மில்லியன் டொலர்கள் வருவாயைவிட 40 சதவீதம் அதிகமாகும்.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை அனுப்பியிருந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியானது இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை 275,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...