புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 5.4 பில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, தொழிலாளர்கள் கடந்த நவம்பரில் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட 384.4 மில்லியன் டொலர்கள் வருவாயைவிட 40 சதவீதம் அதிகமாகும்.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை அனுப்பியிருந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியானது இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை 275,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...