போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள்!

Date:

போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாவதை தடுப்பதற்கும், அவர்களை கைது செய்யவும், பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கான ஆலோசனைகள் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளில் எந்தவொரு நபருக்கும் பொலிஸாரால் அநீதி ஏற்படுமாயின் அது தொடர்பில், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பழிவாங்கல் நோக்கத்துடன் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

இந்தநிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...