மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் விளக்கம்

Date:

5 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது.

கொவிட் காலத்துக்குக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது துண்டிப்பு விகிதம் அசாதாரணமானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை, இவ்வருடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை என உறுதியளித்துள்ளது.

மின்சாரப் பாவனையின் ஒரு மாதத்திற்குப் பின்னரே மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

வழமையாக ஒரு மாதத்திற்குப் பின்னரே சிவப்பு அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவித்த இலங்கை மின்சார சபை  சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 544,488 மின் இணைப்புகள் துண்டிப்புகள் மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...