மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் விளக்கம்

Date:

5 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது.

கொவிட் காலத்துக்குக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது துண்டிப்பு விகிதம் அசாதாரணமானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை, இவ்வருடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை என உறுதியளித்துள்ளது.

மின்சாரப் பாவனையின் ஒரு மாதத்திற்குப் பின்னரே மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

வழமையாக ஒரு மாதத்திற்குப் பின்னரே சிவப்பு அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவித்த இலங்கை மின்சார சபை  சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 544,488 மின் இணைப்புகள் துண்டிப்புகள் மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...