‘லைப் பொண்ட்’ நிறுவனத்தின் திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Date:

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்  ஞாயிறு 2023 டிசம்பர் 03 ஆம் திகதி கொலன்னாவ நாஸ் கலாசார மையத்தின் கேட்போர்கூடத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரெய்ன்கோ நிறுவனத்தின் தலைவரும் நாடறிந்த சமூக சேவையாளருமான அல்.ஹாஜ் எஸ்.எல்.எம். பௌஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்தக் கற்கை நெறியின் முதலாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நாஸ் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் நஜ்மான் ஸஹீட், சிகாமணி அமீனா முஸ்தபா உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமான லைப்பாண்ட் நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்களை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...