08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Date:

முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது எட்டு மாத மகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறை விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் இவர் முறைகேடான உறவில் இருந்துள்ளார், அந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி இவர் தன்னுடன் இருந்த பொழுதுகளை காணொளியாக எடுத்துள்ளார். இவ்வாறு எடுத்த காணொளிகளை அவரது கணவனுக்கு அனுப்பி வைப்பதாக மிரட்டி, பணம் பறித்துள்ளார்.

இதன்படி இதுவரை சுமார் நான்கு இலட்சத்தை பெற்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை (28) மதியம் அவர் அறுபதாயிரம் ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதம் முன் குதிக்க முயற்சித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

பெண்ணுடன் முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல பொலிசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...